1. சீராக்கின் ஞானம் என்னும் நூலின் ஆசிரியர்
யார்?
ஏசுவின் மகன் சீராக்.
2. இந்நூலை எந்த மொழியில் எழுதினார்?
எபிரேய மொழியில்.
3. இந்நூலை கிரேக்க மொழியில் மொழி
பெயர்த்தது யார்?
ஏசுவின் பேரன். (முகவுரை 1:14)
4. இந்நூலின் உள்ளடக்கம் என்ன?
ஞானம் பற்றிய கருத்துக் குவியலைக் கொண்டது.
6. இந்நூலாசிரியரின்படி ஞானத்தின்
ஊற்று எது?
ஞானம் எல்லாம் ஆண்டவரிடமிருந்தே வருகிறது: அது என்னும்
அவரோடு இருக்கிறது.(1:1)
8. ஞானத்தின் தொடக்கம் எது?
ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதல். (1:14)
10. ஞானத்தைத் தர நாம் செய்யவேண்டியது
என்ன?
கட்டளைகளைக் கடைப்பிடித்தால் ஆண்டவரே வாரி வழங்குவார்.
(1:26)
12. தந்தையரை மேம்படுத்துவோருக்கு
கிடைக்கும் பலன் என்ன?
நீடு வாழுவார். (3:6)
14. மகன் தன் தந்தைக்கு செய்யவேண்டிய
கடமை என்ன?
"குழந்தாய், உன் தந்தையின் முதுமையில் அவருக்கு உதவு,
அவரது வாழ்நாளெல்லாம் அவர் உள்ளத்தை
புண்படுத்தாதே".
(3:12)
16. இறுமாப்பு கொண்டோருக்கு அதைக்
குணப்படுத்த மருந்து
உண்டா?
மருந்தேயில்லை: ஏனெனில் தீமை அவர்களுக்குள் வேரூன்றி
விட்டது. (3:18)
18. தருமம் செய்வதால் நமக்குக் கிடைப்பது என்ன?
"எரியும் நெருப்பை தண்ணீர் அவிக்கும்: தருமம் செய்தல்
பாவங்களைக் கழுவிப்போக்கும்". (3:30)
20. ஏழை மனிதரிடம் நடந்து கொள்ளும்
முறை என்ன?
"துன்புறுவோரின் வேண்டுதலைத் தள்ளிவிடாதே:
ஏழையிடமிருந்து உன்முகத்தைத் திருப்பிக்
கொள்ளாதே". (4:4)
21. சீராக்கின் ஞானம் 4:1-5 ல்
சொல்வது என்ன?
"குழந்தாய்,
- ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே;
- கையேந்தி நிற்போரைக் காத்திருக்க வைக்காதே.
- பசித்திருப்போரை வாட்டி வதைக்காதே;
- வறுமையில் உழல்வோரை எரிச்சலூட்டாதே..
- உன்னிடம் உதவி வேண்டுவோரிடமிருந்து உன் கண்களைத்
திருப்பிக் கொள்ளாதே;
- உன்னைச் சபித்திட யாருக்கும் வாய்ப்பு அளிக்காதே."
22. சீராக்கின் ஞானம் 6:5-16ல்
சொல்வது என்ன?
- "இன்சொல் நண்பர் தொகையைப் பெருக்கும்;
- பண்பான பேச்சு உன் மதிப்பை உயர்த்தும்.
- அனைவரோடும் நட்புடன் பழகு;
- ஆனால் ஆயிரத்தில் ஒருவரே உனக்கு ஆலோசகராய் இருக்கட்டும்.
- ஆய்ந்து நட்புக்கொள்; நண்பரையும் விரைவில் நம்பிவிடாதே.
- தன்னலம் தேடும் நண்பர்களும் உண்டு;
- அவர்கள் உன் நெருக்கடியான வேளையில் உன்னோடு
இருக்கமாட்டார்கள்.
- பகைவர்களாக மாறும் நண்பர்களும் உண்டு;
- அவர்கள் உங்கள் பிணக்கை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி, உனக்கு
- இழிவைக் கொண்டு வருவார்கள்...
- நம்பிக்கைக்குரிய நண்பர்கள் நலம் அளிக்கும் மருந்து
போன்றவர்கள்;
- ஆண்டவருக்கு அஞ்சுவோரே இத்தகைய நண்பர்களைக்
கண்டடைவர்."