மரியாயின்சேனை
வரலாறு
உருவாக்கம்:
1921 (ஃபிராங் டாஃப்)
மரியாயின் சேனை நிறுவனர்
பிராங்க் டஃப் 1889 ஜூன் திங்கள் 7-ம் நாள் அயர்லாந்து நாட்டிலுள்ள டப்ளின்
நகரில்; பிறந்தார். தமது 18-ம் வயதில் அரசு உயர்பணியில் சேர்ந்தார். இருபத்திநான்காவது
வயதில் தூய வின்சென்ட் தே பவுல் சபையில் சேர்ந்து அதன் வாயிலாக தனது கத்தோலிக்க
விசுவாசத்தில் ஆழமான மன உறுதி கொண்டார். அத்துடன் ஏழை எளியவர்கள், மற்றும்
சமுதாயத்தில் நலிவுற்றவர்களின் தேவைகளில் பரிவும், அக்கறையும்
கொண்டார். 1921 செப்டம்பர் 7-ம் நாள் சில கத்தோலிக்க பெண்கள் மற்றும்
டப்ளின் உயர் மறை மாவட்டத்தைச் சார்ந்த அருள்தந்தை மைக்கிள் தோஹர் ஆகியோருடன்
சேர்ந்து மரியாயின் சேனையின் முதல் பிரசீடியத்தைத் தோற்றுவித்தார். அன்று
முதல் அவரது இறுதி மூச்சு வரை (7-11-1980) சேனை உலகம் முழுவதும் பரவுவதற்கு
தம் வாழ்வு முழுவதையும் வீரத்தன்மையுடன் அர்ப்பணித்தார். இரண்டாம் வத்திக்கான்
சங்கத்தில் பொதுநிலைப் பார்வையாளராக பங்கேற்றார். இறைவனின் மீட்புத்
திட்டத்தில் தூய கன்னியின் பங்கு பற்றியும், திருச்சபையின் மறைத்தூதுப்பணியில்
பொதுநிலையினரின் பொறுப்பு பற்றியும், அவருக்கிருந்த உள்ளொளியானது அவரால்
இயற்றப்பட்ட இந்த சேனை நூலில் தெளிவாகப் பிரதிபலிக்கின்றது.
பிராங்க் டஃப் அவர்களுக்கு முத்திப் பேறு பட்டம்
அளிப்பதற்காகச் செபம்
எங்கள் தந்தையாகிய இறைவா!
உமது பணியாளனாகிய பிறாங் டவ் என்பவருக்கு கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபை
என்னும் மறைபொருளை அறியும் ஆழமான ஆற்றலையும், இந்த மறைபொருளின் வழியாக
திருச்சபையில் மரியாளுக்குள்ள இடத்தையும், அறியும் ஆற்றலையும்
கொடுத்தீரே.
இந்த அறிவை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் ஆவலால் தூண்டப்பட்டும், மரியாளில்
அவர் அன்போடு தங்கி நின்றும் அவளுடைய தாய்க்குரிய அன்பை உலகிற்குக்
காட்டும் அடையாளமாகவும், அவளுடைய பிள்ளைகள் அனைவரையும் திருச்சபையின்
மறைபோதகப் பணியில் பங்கு கொள்ளச் செய்யும் ஒரு சாதனமாகவும் அவளுடைய
சேனையை ஆரம்பித்தாரே.
அவருக்கு நீர் அளித்த அருள் வரங்களுக்காகவும், அவரில் விளங்கின துணிகர
மான ஒளிவீசும் விசுவாசத்தின் பயனாக திருச்சபை அடைந்து வரும் நன்மைகளுக்காகவும்,
தந்தையே உமக்கு நன்றி கூறுகின்றோம்.
உமக்கு முன்பாக நாங்கள் வைக்கும் இந்த விண்ணப்பங்களை….... அவருடைய மன்றாட்டினால்
எமக்கு அடைந்து தந்தருள வேண்டுமென்று நம்பிக்கையோடு உம்மை மன்றாடுகின்றோம்.
அத்துடன் உமது திருச்சித்சத்திற்கு ஏற்றதாக இருக்குமானால், உமது
திருப்பெயரின் மகிமைக்காக அவருடைய தூய்மையான வாழ்க்கையை திருச்சபை அங்கீகரித்திட
வேண்டுமென்று, எங்கள் ஆண்டவராகிய
கிறீஸ்துவின் பெயரால் மன்றாடுகிறோம். ஆமென்.
|
வகை: கத்தோலிக்க பொதுநிலையினருக்கான பக்திச்சபை
மரியாயின் பக்திச்சபை
தலைமையகம்: டப்லின், அயர்லாந்து
வலைத்தளம்:
www.legionofmary.ie
மரியாயின் சேனைக்கூட்டத்தில் பயன்படுத்தப்படும் மரியாவின் பீடம்.
சிலையின் வலப்புறம் சேனையின் சின்னம்
மரியாயின் சேனை கத்தோலிக்க திருச்சபையில் தன்னார்வம் கொண்ட பொது
நிலையினரால் நடத்தப்படும் இயக்கமாகும். இது அயர்லாந்து நாட்டின் தலைநகரான
டப்லினில் ஃபிராங் டாஃப் என்ற பொது நிலையினரால் தொடங்கப்பட்டது. இப்போது
கத்தோலிக்க திருச்சபையில் பொது நிலையினரால் நடத்தப்படும் மிகப்பெரிய அமைப்பாக
உருவெடுத்துள்ளது. இதில் தற்போது ஏறத்தாழ 30 லட்சம் பேர் உறுப்பினராக
உள்ளனர். அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ள நாடுகளாக தென்கொரியா, அர்கெந்தீனா,
பிரேசில், பிலிப்பீன்சு ஆகியவை உள்ளன.
வடிவமைப்பு
மரியாயின் சேனை பங்கை அடிப்படையாக கொண்ட அடிமட்ட அமைப்பு பிரசீடியம்.
3-20 நபர்களை உறுப்பினர்களாக கொண்ட பிரசீடியங்கள் வாரந்தோறும் கூட்டங்கள்
பிரசீடிய உறுப்பினர்களால் நடத்தப்படுகிறது.
பல பிரசீடியங்கள் ஒன்றிணைந்த அமைப்பு க்ரீயா ஆகும்.
பல க்ரீயாக்கள் ஒன்றிணைந்த அமைப்பு கொமித்சியம் ஆகும்.
பல கொமித்சியங்கள் ஒன்றிணைந்த அமைப்பு செனட்டஸ் ஆகும்.
பல செனட்டஸ் ஒன்றிணைந்த அமைப்பான கொன்சிலியம். இது மரியாயின் சேனையின்
மிக உயர்ந்த அமைப்பாகும். இது டல்பின், அயர்லாந்தில் அமைந்துள்ளது.
|