|
|
|
ஆகாய் | |
1) ஆகாய் என்னும்
பெயருக்கு பொருள் என்ன? ஆகாய் என்னும் இப்பெயருக்கு "விழாக் கொண்டாட்டம்" அல்லது "திருப்பயணம் செய்வோன்" என்று பொருள். 2) ஆகாய் இறைவாக்கினர் இறைவாக்குரைத்த காலம் எது ? ஆகாய் இறைவாக்கினருக்கு ஆண்டவரின் வாக்கு கி.மு. 520ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. 3) மக்களிடம் கூறுமாறு ஆண்டவர் ஆகாயிடம் சொன்னது என்ன? ஆண்டவரது இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான காலம் இன்னும் வரவில்லை .(1:2) 4) ஆண்டவரது இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான காலம் இன்னும் வரவில்லையென ஆண்டவர் கூறியது ஏன்? ஏனெனில் மக்கள் தூயவர்களாக இல்லை. 5) யூதாவின் ஆளுனராக இருந்தவர் யார்? செருபாபேல். (2:2) 6) அப்பொழுது தலைமைக் குருவாக இருந்தவர் யார்? யோசுவா. (2:2) 7) ஆகாய் 2:6 ல் என்ன கூறுகின்றார்? ஏனென்றால் சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறார், "கொஞ்ச காலத்திற்குள்ளே, நான் மீண்டும் எல்லாவற்றையும் அசையச் செய்வேன். நான் பரலோகத்தையும் பூமியையும் அசையச் செய்வேன். நான் கடலையும் வறண்ட நிலத்தையும் அசையச் செய்வேன். |
|
Stats Counter hit counter |