|
|
|
திருப்பாடல்கள் | |
1. " திருப்பாடல்கள்" என்னும் நூலில் உள்ள மொத்தத் திருப்பாடல்கள் எத்தனை? 150. 2. " திருப்பாடல்கள்" என்றால் என்ன? இஸ்ராயேல் மக்கள் தங்கள் வழிபாட்டில் பயன்படுத்திய பக்திப் பாடல்கள், இசை மன்றாட்டுக்கள் ஆகியவற்றன் தொகுப்பு. 3. திருப்பாடல்களை எழுதியவர் யார்? தாவீது அரசர் எழுதியதாகக் கருதப்படுகிறது. 4. மெசியாவைப்பற்றி இரண்டாவது திருப்பாடலில் வாசிப்பது என்ன? " நீர் என் மைந்தர், இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்" (2:7) 5. பாவமன்னிப்பைப் பற்றி திருப்பாடல் எண் 32 கூறுவது என்ன? " எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறு பெற்றவர்" (31;1) 6. எளியோர் மேல் அக்கறை காட்டுவோரை ஆண்டவர் எவ்வாறு கைமாறு அளிக்கிறார் என திருப்பாடல் எண் 41 கூறுகிறது? துன்பநாளில் அவரை விடுவிப்பார். (41:1) 7. தாவீது தன்னுடைய குற்றத்தை உணர்ந்து பாடுவதை திருப்பாடல் எண் 51 எவ்வாறு சித்தரிக்கிறது? " கடவுளே, உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும், உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களை துடைத்தருளும். ஏன் தீவினை முற்றிலும் நீங்கும்படி, என்னைக் கழுவியருளும். என் பாவம் அற்றுப்போகும்படி, என்னைத் துர்ய்மைப்படுத்தியருளும்" (51:1-2) 8. தாவீது கடவுள்மேல் வைத்துள்ள நம்பிக்கையை திருப்பாடல் எண் 62 எப்படிக் காட்டுகிறது? " எனக்கு மீட்புக் கிடைப்பது அவரிடமிருந்தே, உண்மையாகவே என் கற்பாறையும் மீட்பும் அவரே, என் கோட்டையும் அவரே, எனவே நான் சிறிதும் அசைவுறேன்" (62:1-2) 9. திருப்பாடல் 103ல் தாவீது ஆண்டவரின் அன்பை எவ்வாறு பாடுகிறார்? " என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என்முழு உளமே! அவரது திருப்பெயரை ஏற்றிடு! என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே!" (103:1-2) 10. திருப்பாடல் 110, மெசியா எவ்வாறு குரு என்றும், அரசர் கூறுகிறது? " மெலகிசேதேக்கின் முறைப்படி, நீர் என்றென்றும் குருவே" (110:1) 11. திருப்பாடல் 133, சகோதர அன்பைப் பற்றி எவ்வாறு விபரிக்கிறது? " சகோதரா; ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று,எத்துணை இனியது!" (133:1) 12. மிகப்பெரிய திருப்பாடல் எண் எது? திருப்பாடல் 119. இதில் 176 வசனங்கள் உள்ளன. 13. மிகக் குறுகிய திருப்பாடல் எது? திருப்பாடல் 117. இதில் 2 வசனங்கள் உள்ளன. 14. திருப்பாடல் எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது? 5 பிரிவுகளாக. |
|
Stats Counter hit counter |