maraikal
MUM
 
 

தூய ஆவி

தூய ஆவியின் துணைகொண்டு புதுப்படைப்பாய் மாறுவோம்
 

பெந்தெகோஸ்தே நாளன்று சீடர்கள் தூய ஆவியை பெற்றார்கள் பெந்தெகோஸ்தே என்றால் "ஐம்பதாம் நாள்" என்று பொருள். பெந்தெகோஸ்தே நாளோடு பாஸ்கா காலம் நிறைவு அடைகிறது. பெந்தெகோஸ்து நாளில் ஆவியானவர் அவர்கள் மீது அக்னி நாக்கு வடிவில் இறங்கி வந்தார். அன்று தூய நாளாக இருந்ததால் தெரு முழுவதும் நிறைய மக்கள் இருந்தார்கள். தூய ஆவியைப் பெற்ற சீடர்கள் "இயேசுவே ஆண்டவர்" என்று போதித்தார்கள்.

அங்கிருந்த மக்கள் ஒவ் வொருவரும் தத்தமது மொழியிலே கேட்டார்கள். தூய ஆவியானவர் தம் அருளினால் மக்களின் இதயங்களையும் காதுகளையும் தொட்டார். எனவே ஏறக்குறைய 3000 மக்கள் கிறிஸ்தவர்களாக வாழ திருமுழுக்குப் பெற்றார்கள். இவர்கள் அனைவரும் ஆவியின் அருளினால் அறுவடையில் விளைந்த முதற் கனிகள். இவ்வாறு புதிய கிறிஸ்தவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் அருளால் புதுப் பிறப்படைந்த புதிய உடன்படிக்கையின் மக்கள் ஆனார்கள்.

மனித துணையைவிட இறைவனின் துணை நம் அனைவருக்கும் அவசியம். இந்தத் தேவையை உணர்ந்துதான் இறைமகன் இயேசு 'உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன் அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்' (யோவா 14 : 16 – 17) என்று வாக்குறுதி வழங்கினார். துணையாளர் தூய ஆவியானவர் சீடர்கள் மீது இறங்கி துவண்டு போயிருந்தவர்களை பணி வாழ்வில் தொடர தூண்டுகிறார். அவர்களும் ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்டு தமது மொழிகளில் உயிர்த்த ஆண்டவருக்கு சான்று பகர தயாராகின்றனர்.


ஆவியானவர் உலகம் படைக்கப்பட்டதிலிருந்து செயல்பட்டு வந்திருக்கிறார். மக்கள் அனைவரையும் வழி நடத்தி வந்திருக்கிறார் மனிதர்களுக்கு கடவுளின் திட்டத்தை வெளிப்படுத்தியும் வாழ்வின் மறை பொருளை விளக்கியும் இறைவாக்குகளை இறைவாக்கினர் வழியாக எடுத்துரைத்தும் வந்திருக்கிறார். புதிய ஏற்பாட்டில் அதே ஆவியானவர் புனிதத் திரு முழுக்குயோவானின் சக்தி வாய்ந்த இறைவார்த்தையை வெளிப்படுத்தவும் காரணமாக இருந்தார். இயேசு திருமுழுக்குப் பெறும்போதும் மக்கள் பணியில் ஈடுபடும் போதும் தீவிரமாக செயல்பட்டார். இயேசுக் கிறிஸ்து ஆவியின் வல்லமையால் முழுமையாக நிரப்பப்பட்டு போதனை களையும் புதுமைகளையும் புரிந்திடவும் இறுதியில் சிலுவையில் இறை திட்டத்தை நிறைவேற்ற வும் மன உறுதியை அவருக்கு கொடுத்தார்.

பெந்தெகோஸ்தே நாளன்று ஆவியானவர் முதல்முறையாக இயேசுவை பின்பற்றிய அனைத்து சீடர்களையும் முழுமையாக ஆட்கொண்டு சீடர்களுக்கு இயேசுவைப் பற்றி அறிவிக்க மனத்திடத்தைத் தருகின்றார். இன்று தான் இயேசுவின் உடலான திருச்சபை பிறந்தது. எனவே இன்று திருச்சபையின் பிறந்த நாள் இன்று நாம் ஒவ்வொருவரும் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில் தப்பு எதுவும் இல்லை பெந்தெகோஸ்தே நாளன்று சீடர்கள் தங்களது பணியை முதன் முறையாக முழுமையாக புரிந்துகொள்கிறார்கள் பணித்தெளிவைப் பெற்றவர்கள் ஒற்றுமையின் உறைவிடமாக அமைகின்றார்கள்.

தூய ஆவியால் திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவரின் கடமையை தூய ஆவி தம் அருட்பொழிவால் தெளிவாக்கு கின்றார். எனவே சீடர்களிடம் இறங்கி வரும் தூய ஆவியா னவரின் பொழிவு நம் ஒவ் வொருவரையும் ஒற்றுமையின் பாலமாக செயலாற்ற அழைக்கிறது. நாம் கிறிஸ்துவின் ஆவியால் திருமுழுக்கு பெற்றிருந்தோ மென்றால் நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவைப் பற்றி மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும். எனவே தூய ஆவியின் துணை கொண்டு புதுப்படைப்பாய் மாறுவோம் புது வாழ்வை பெற்றிடுவோம்.

 


 

 
Free Blog Widget
Stats Counter
hit counter