TAMIL CATHOLIC PAGE - FRANCE

maraikal
MUM
ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்: உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.மத்தேயு 5:44


 
 
 

இளையோர்

 
 
 
 
 
 
 
 
 
 
 
         

ஒப்புரவு அன்னை ஆலயம் - Belleville - France

மூவேளை செபம்   

பணியகத்தின் செயல்பாடுகள் 2022



 

மறையாசிரியர் பீற்றர் அவர்கள் உருவாக்கிய பாடல்

Song

எங்கே சுமந்து போறீர்

சர்வ தயாபர இயேசுவே

எனது சனமே நானுனக்கு



† சிலுவைப் பாதை †

சிலுவைப் பாதை

lent 40  days  2023

Lent song.mp4

   


அர்த்தமுள்ள ஆன்மீகம் - நலம் தரும் நம்பிக்கை


 




தவக்காலம் ஏன் ?

பாவம் என்றால் என்ன?

கிறிஸ்தவத்தில் இயேசு சுவாமியின் திருப்பாடுகள் நமக்கு உணர்த்துவது என்ன ?
 

"கடவுளோடு ஒப்புரவாகுங்கள்"

தவக்காலம் என்பது இரக்கத்தின் காலம்

 

காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று அவர் கூறினார். மாற்கு 1:15
 



தவக்காலம் என்பது ஒரு அடையாளத்தின் நாளாகிப் போய்விட்டதோ எனும் கவலை எழுவது இயல்பே. தவக்காலம் இயேசுவின் பாடுகளைச் சிந்தித்து அழுவதற்கான காலமோ, அல்லது அந்த சோகத்தை முகத்தில் பூசிக்கொண்டு திரிவதற்கான காலமோ அல்ல. நமது பாவங்களைக் குறித்து சிந்தித்து அதிலிருந்து மனம் திரும்பி வெளியே வருவதற்கு தூய ஆவியின் உதவியை நாடும் காலம். இயேசுவே சொல்கிறார், “எனக்காக அழவேண்டாம், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்” என்று ! மீட்பு என்பது குடும்பம் குடும்பமாகவும் வரலாம். எனவே ஒட்டு மொத்த குடும்பத்துக்காகவே செபிக்கவும், அழவும் நாம் அழைக்கப்படுகிறோம்.

இந்த தவக்காலத்தை மனதில் கொண்டு, நமக்கு நன்றாகத் தெரிந்த பாவங்களிலிருந்து விடுதலை பெற முதலில் இறைவனின் உதவியை நாடவேண்டும். சிற்றின்பம், கோபம் போன்ற பாவங்கள் இயேசு நேரடியாகவே கண்டித்தவை. அவற்றிலிருந்து வெளியே வரும்போது நம்மிடமிருக்கும் அடுத்த நிலை பாவங்கள் தெரியத் துவங்கும். அதையும் விடடு விடவேண்டும். இப்படி படிப்படியாக ஒவ்வொரு பாவமாக விட்டு விடும் போது நாம் இயேசு வாழ்ந்த வாழ்க்கையை நோக்கி நகர்கிறோம் என்று பொருள். இயங்காமல் இருக்கும் காஸ்ட்லி காரை விட ஓடிக்கொண்டிருக்கும் மாட்டு வண்டியே மேலானது ! ஒவ்வொரு படியாக, ஒவ்வொரு பாவமாக நாம் விட்டு விடுதலே புனிதத்தை நோக்கிய வாழ்க்கையின் முதல் படி.

இந்த தபசுகாலத்திலாவது ஒரு உறுதி மொழி எடுப்போம். நமக்குத் தெரிந்த பாவங்களை விலக்குவோம். இருட்டுக்குள் இருக்கும் வரை நமது பாவங்கள் நமக்குத் தெரிவதில்லை. நாம் ஒவ்வொரு பாவத்தை விலக்கும் போதும் இயேசுவின் ஒளி நம்மீது கொஞ்சம் அதிகமாய்ப் பாயும். அது நமது அடுத்தடுத்த பாவங்களை நமக்கு அடையாளம் காட்டும். அவற்றையும் நாம் இறைவனின் அருளால் கடப்போம். இப்படியே தொடர்ந்து இயேசுவோடு நடப்போம். அதுவே ஆன்மீக வளர்ச்சி. அதுவே இயேசு விரும்பிய மாற்றம்.
மனமாற்றம் என்பது உணவையோ, உடையையோ மாற்றுவதல்ல, மனதை முழுமையாய் இறைவன் பக்கமாய்த் திருப்புவதே.

இயேசு மனிதனாய் வந்ததன் நோக்கமே அது தான். ஆதாம் மனுக்குலத்தின் முதல் துளி. ஆதாம் ஏவாளுடன் பாவமும் துவங்கியது. காயின் பாவத்தின் அடுத்த நிலைக்குச் சென்றான். மனுக்குலம் படிப்படியாய் இருளடைந்தது. ஆங்காங்கே தோன்றிய வெளிச்ச விதைகள் தவிர எங்கும் கும்மிருட்டு. அந்த இருட்டை அழித்து மீண்டும் ஒரு தூய வாழ்க்கைக்கான வாய்ப்பையும், வழியையும் நமக்கு உருவாக்கித் தந்தது தான் இயேசு செய்த பணி. நாம் இயேசுவின் வார்த்தைகளையும், வாழ்க்கையையும் இறுக்கிப் பிடிக்க வேண்டும். ஒவ்வொரு செயலிலும் அவருடைய வாசனை வீச வேண்டும். அதுவே அற்புதமான கிறிஸ்தவ அனுபவம்.

 

Fr. William J. Bausch என்ற அருட்பணியாளர் எழுதிய “Once Upon a Gospel: Inspiring Homilies and Insightful Reflections” என்ற நூலில் கூறப்பட்டுள்ள ஒரு கதை இது!

 


19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த ஓர் ஆயரைப் பற்றிய கதை. இந்த ஆயர் சிறந்த மறையுரையாளர். இறைவனை நம்பாதவர்கள், திருஅவையை வெறுத்துப் பழிப்பவர்கள் ஆகியோரைத் தேடிச்சென்று அவர்களிடம் பேசி வந்தார் இந்த ஆயர். அவர்களிடம் அடிக்கடி ஒரு நிகழ்வை எடுத்துச் சொல்வது இவர் வழக்கம்.


பாரிஸ் நகரில் புகழ்பெற்ற Notre Dame பேராலயத்தின் வாசலில் ஒவ்வொரு ஞாயிறன்றும் இளைஞன் ஒருவர் நின்றுகொண்டு, ஞாயிறு திருப்பலிக்குச் செல்லும் அனைவரையும் முட்டாள்கள் என்று உரத்த குரலில் கேலி செய்து வந்தார். கோவிலுக்குச் செல்பவர்கள் அவரைக் கண்டு பயந்து ஒதுங்கி சென்றனர். ஒவ்வொரு வாரமும் இந்த இளைஞனின் ஆர்ப்பாட்டம் எல்லை மீறிச் சென்றது.


ஒரு முறை ஞாயிறு திருப்பலிக்கு முன், கோவிலின் பங்குதந்தை பேராலய வாசலுக்குச் சென்றார். அவரைக் கண்டதும், இளைஞனின் கேலிப்பேச்சு உச்ச நிலையை அடைந்தது. இளைஞனின் கேலிகளை எல்லாம் பொறுமையுடன் கேட்ட பங்குத்தந்தை அவரிடம், "நான் இப்போது கூறும் சவாலை உன்னால் நிறைவேற்ற முடியாது. உனக்கு அவ்வளவு
தூரம் வீரமில்லை" என்று கூறினார். இதைக் கேட்டதும் இளைஞனின் கோபமும், கேலியும் கட்டுக்கடங்காமல் சென்றன. "முட்டாள் சாமியாரே! எனக்குச் சவால் விடுகிறாயா? சொல், எதுவாயினும் செய்து காட்டுகிறேன்." என்று அனைவரும் கேட்கும்படி கத்தினார். பங்குத்தந்தை அமைதியாகத் தொடர்ந்தார்: "கோவிலுக்குள் வா. பீடத்திற்கு முன் நின்று, சிலுவையில் இருக்கும் இயேசுவை உற்றுப் பார். பின்னர், உன்னால் முடிந்த அளவு உரத்தக் குரலில், 'கிறிஸ்து எனக்காக சிலுவையில் இறந்தார். ஆனால், அதைப்பற்றி எனக்குச் சிறிதும் கவலையில்லை.' என்று உரத்தக் குரலில் நீ கத்த வேண்டும். உன்னால் முடியுமா?" என்று பங்குத்தந்தை சவால் விடுத்தார்.


அந்தச் சவாலைத் துச்சமாக மதித்த இளைஞன், பீடத்தை நெருங்கினார். சுற்றி இருந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இளைஞன் உரத்தக் குரலில் "கிறிஸ்து எனக்காக சிலுவையில் இறந்தார். ஆனால், அதைப்பற்றி எனக்குச் சிறிதும் கவலையில்லை" என்று கத்தினார். பங்கு குரு அவரிடம், "நன்றாகக் கத்தினாய். இன்னொரு முறை கத்து" என்றார். இரண்டாவது முறையும் இளைஞன் கத்தினார். ஆனால், இம்முறை அவரது வார்த்தைகளில் கொஞ்சம் தடுமாற்றம் தெரிந்தது. பங்கு குரு இளைஞனிடம், "தயவு செய்து இறுதியாக ஒரு முறை மட்டும் கோவிலில் உள்ள அனைவரும் கேட்கும்படி கத்திவிட்டு, பின்னர் நீ போகலாம்." என்று கூறினார்.


இம்முறை இளைஞன் சிலுவையை உற்றுப் பார்த்தார். கைகளை உயர்த்தினார். அவர் கத்த முற்பட்டபோது, வார்த்தைகள் வரவில்லை. சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுவை அவரால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. கண்களைத் தாழ்த்தினார். கண்ணீர் தெறித்தது.


இந்த நிகழ்வை விவரித்துக் கூறிய ஆயர் சிறிது நேரம் அமைதியாக இருந்தபின், தொடர்ந்தார்: "அந்த இளைஞன் நான்தான். கடவுள் எனக்குத் தேவையில்லை என்று வாழ்ந்தவன் நான். ஆனால், கடவுள் எனக்குத் தேவை என்று சிலுவையில் தொங்கிய இயேசு எனக்கு உணர்த்தினார். அது மட்டுமல்ல, நான் கடவுளுக்குத் தேவை என்பதையும் அவர் எனக்குப் புரியவைத்தார்" என்று கூறினார் அந்த ஆயர்.


சிலுவையில் அறையுண்ட இயேசுவை இந்த வாரம் முழுவதும் அடிக்கடி சந்திக்கவும், சிந்திக்கவும் இருக்கிறோம். நமக்குள் என்னென்ன மாற்றங்கள் உருவாகப் போகின்றன?

தவக்கால உணவு


தவக்காலம் நம்மை ஒடுக்கும் காலம் அல்ல, ஒடுக்கப்பட்டவர்களை நினைக்கும் காலம்.

தவக்காலம் உபவாசிக்கும் காலம் மட்டுமல்ல, உணவில்லாதவர்களை உபசரிக்கும் காலம்.

தவக்காலம் பிறரை திருத்தும் காலம் அல்ல, தன் குறையை ஆழமாய் உணரும் காலம்.

தவக்காலம் அமைதியாயிருக்கும் காலம் அல்ல, இறைவனோடு அதிகமாய் உரையாடும் காலம்.

தவக்காலம் முடங்கி கிடக்கும் காலம் அல்ல, தோய்ந்த இறைப்பணியை முடுக்கி விடும் காலம்.

தவக்காலம் தீயவற்றை விடும் காலம் மட்டுமல்ல, நற்செயல்களுக்காக திறமைகளை வளர்க்கும் காலம்.

தவக்காலம் மக்களிடமிருந்து பிரியும் காலம் அல்ல, மக்களோடு ஒப்புரவாகும் காலம்.

தவக்காலம் இயேசுவின் சிலுவையருகே சுற்றும் காலம் அல்ல.

நம் சிலுவையை எடுத்துக் கொண்டு புறப்படும் காலம்.

தவக்காலம் இயேசுவின் மரணத்திற்காய் வருந்தும் காலம் மட்டுமல்ல.

அந்த மரணத்திற்கு காரணம் என் பாவம் என்பதை உணரும் காலம்.

தவக்காலம் வெறும் 40 நாள் பயணமல்ல, இறைவன் நமக்கு கொடுத்த நாள் முடியும் வரையிலும்.

 

 

சித்திரை மாத திருப்பலிகள் 

 02-04-2023 - திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு
09:00 Eglise Ste.Genivieve - 95140 - Garges Sarcelle


09:00  Notre Dame de Blanc - Mesnil


12:30 Eglise St. Joseph des Nations – Goncourt – Paris

 

 06-04-2023 புனித வியாழன் திருப்பலி  
18:30 Chapelle NDR. de Belleville – 75011 - Paris

 

07- 04-2023 புனித வெள்ளி வழிபாடு
16:00 Eglise St. Joseph des Nations – Goncourt – Paris

 

08- 04-2023 பாஸ்காத் திருவிழிப்பு
18:00 Eglise Ste.Genivieve - 95140 -  Garges les Gonesse
16:00 Eglise St. Joseph des Nations – Goncourt – Paris

 

09- 04-2023 ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா
08:30 Notre Dame de Blanc - Mesnil

12:30 Eglise St. Joseph des Nations – Goncourt – Paris

17:00 Eglise St. Marie – Neuilly Sur Marne

   

தேசிய தலைமைக் குருவும் அனைத்து உறுப்பினர்களும் வருடாந்த கூட்ட முடிவில் எடுத்த படம்- 2021

 

video/Fatima.mp4

மரியன்னையின் பிறப்பு

 

தவக்காலத் தியானங்களை இடப்பக்கமுள்ள தவக்காலம் என்னும் பகுதியை அழுத்தி பார்க்கமுடியும்
 

      தன்னை நேசிப்பது போல பிறரை நேசி Mp4
 
 



அன்பான உறவுகளே!

எங்களது வாழ்வியலையும், உடல் உள ஆரோக்கியத்தையும் மிகப்பெரிய அளவில் பாதித்திருக்கின்ற இந்த இக்கட்டான காலகட்டத்தில், வதிவிட உரிமையை (விசா) இன்னும் பெறாதவர்களுக்கும்,  கடினமான குடும்ப நிலையில் குழந்தைகளுடன் வாழ்பவர்களுக்கும், முதியவர்களுக்கும், உறவினர்களின் உதவிகள் கிடைக்கப்பெறாதவர்களுக்கும் உதவி செய்ய நாங்கள் முன்வந்துள்ளோம்.


உங்கள் ஒவ்வொரு குடும்பங்களிலும் குறிப்பிட்ட நிலைகளில் இருந்து உதவி தேவைப்படுபவர்கள்: கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.


Père: Paul Matthew MATHANRAJ

Aumônerie Tamoule Catholique Sri Lankaise
57 Boulevard de Belleville
75011 Paris
Tel: 0148069505


உங்களது நலத்திற்காகவும், மன உறுதிக்காகவும், இந்த சோதனைக்காலத்திலிருந்து சீக்கிரம் மீண்டு வருவதற்காகவும் இறைவேண்டல் செய்கின்றோம்.
- நன்றி -

 

 

 

அன்பு இயேசுவே! என் அகக்கண்களைத் திறந்து உண்மையின் தெய்வத்தைக் காணும் வரம் தாரும். ஆமென் நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம். அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். தி:பா: 33:20

 

 

 

    

                                 

Free Blog Widget
Stats Counter
hit counter