TAMIL CATHOLIC PAGE - FRANCE

maraikal
MUM
அன்பு உயிர்த்த இயேசுவே என்னையும் உமது பணியில் உடன் பணியாகியாக மாற்றியருளும் ஆமென்.

 
 
 

இளையோர்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

         

ஒப்புரவு அன்னை ஆலயம் - Belleville - France

மூவேளை செபம்   

பணியகத்தின் செயல்பாடுகள் 2022

 

தேவமாதாவின் வணக்கமாதம்


இந்த மாதத்தில் தேவமாதாவைப் பின்பற்றி பக்தியுடனேயும் ஞான சுறுசுறுப்புடனேயும் நடக்கிறதற்காக ஆராய்ந்து பார்க்க வேண்டிய மூன்று முகாந்தரங்கள்.

1- வது தேவமாதாவின் நிகரில்லாத மகத்துவமும், 

2- வது மோட்ச இராக்கினியின் பேரில் அர்ச்சியஷ்டவர்கள் வைத்த பக்தியின் மாதிரிகையும், 

3- வது தேவமாதாவின் பேரில் காட்டும் பக்தியினால் வரும் ஞானப்பிரயோசனமுமாகும். 

1-வது...

மனிதரிடத்தில் பணிவான வணக்கத்தை எழுப்புகிற முகாந்தரம் எல்லாம் அதிசயத்துக்குரிய கன்னிமாமரியிடத்தில் அடங்கியிருக்கிறது. அர்ச்சியசிஷ்ட கன்னிமாமரி அன்னை படைக்கப்பட்ட வஸ்துக்களுக்குள்ளே மகா பரிசுத்தமுள்ளவர்களுமாய் சர்வேசுரன் உண்டாக்கின மகாத்துமாக்களுக்குள்ளே மேலானவர்களுமாய், பரலோக பூலோகத்தின் இராக்கினியுமாய், மனிதர்களுக்கும், சம்மனசுகளுக்கும் ஆண்டவளுமாய், கிறிஸ்தவர்களுக்கு அடைக்கலமான தாயானவருமாய் இருக்கிறதுமல்லாமல், அளவில்லாத மகிமை உடைத்தான ஆராதனைக்குரிய சேசுநாதரைப் பெற்றதினால் எவராலும் கண்டுபிடிக்கக்கூடாத உன்னத மாட்சி பொருந்தியவர்களுமாயிருக்கிறார்கள்.

தேவமாதா மோட்சவாசிகளுக்குள் மேலான சிம்மாசனத்தையும் மனோவாக்குக் கெட்டாத மகிமையையும் பெற்றிருக்கிறபடியால் அன்னையைச் சிநேகிப்பதும் வாழ்த்துவதும் துதிப்பதும் நியாயம். ஆதலால் அர்ச்.பெர்நர்து சொல்லியிருக்கிறபடி தேவமாதாவே முழுமனதுடன் நேசித்து அன்னையை தக்க மேரையோடு சிநேகிக்கக் கடவோம். அன்னை சர்வேசுரனால் உண்டாக்கப்பட்டவருமாய் ஆண்டவருடைய அடிமையானவருமா யிருக்கிறபடியால் சர்வேசுரனுக்குரிய ஆராதனையை மாமரியன்னைக்குச் செலுத்தக்கூடாது. மற்றபடி மனிதர் மாதாவை எவ்வளவு வணங்கினாலும் அவ்வணக்கம் மாதாவுக்குப் பொருந்தும். ஆகையால் அவருடைய மகிமைக்காகக் குறிக்கப்பட்ட இந்த மே மாதத்தில் அனுதினமும் அன்னையை ஸ்துதித்து நன்றியறிந்த மனதோடு அன்னையை சிநேகிக்கக்கடவோம்.

2-வது...

எவ்விடத்திலும் எக்காலத்திலும் அர்ச்சியஷ்டவர்களெல்லோரும் இந்த இராக்கினியின் பேரில் மிகுந்த பக்தி நேசத்துடன் விளங்கி வந்தார்கள். அவர்களுக்குள்ளே அன்னையை சிநேகியாதவர்களும் முழுமனதோடு வேண்டிக் கொள்ளாதவர்களும் இல்லை. மனிதர் எல்லோரும் அன்னையின் மகிமையை அறிந்து அதிகமாய்க் கொண்டாடி சிநேகிக்கும்படிக்கு அர்ச்சியஷ்டவர்கள் சொன்னதும் செய்ததும் பிரசங்கித்ததும் சொல்லி முடியாது. அவர்கள் தேவமாதாவின் பேரில் வைத்த அத்தியந்த பக்தியினால் சுலபமாய் மோட்சத்தை அடைந்தார்களென்று அறிந்து அவர்களை பின் சென்று தேவமாதாவை வணங்கி அவர்கள் மேல் நம்பிக்கையும் பட்சமும் வைக்கக்கடவோம். விசேஷமாய் இந்த மாதத்தில் ஞான சுறுசுறுப்போடு நாள்தோறும் அன்னைக்கு ஊழியம் செய்ய ஆசையாயிருப்போமாக.

3-வது...

வேதபாரகர் சொல்லியிருக்கிறபடி, தேவமாதாவின் பேரில் வைத்திருக்கும் பக்தியினால் திரளான வரப்பிரசாதங்கள் வருகிறதுமல்லாமல், அந்தப் பக்தியானது மோட்ச பாக்கியத்தை அடைகிறதற்கு அடையாளமாயிருக்கின்றது. அந்தத் திவ்விய மாதா தம்மை வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்காகச் சர்வேசுரனுடைய சந்நிதியிலே இடைவிடாமல் மன்றாடி அவர்களுக்கு வேண்டிய சகல உதவியையும் பெற்றுக்கொடுப்பார்கள். பரலோகமும் பூலோகமும் அழிந்து போனாலும் தேவமாதா தமது பேரில் பக்தியுள்ளவர்களுக்கு ஒருக்காலும் உதவி செய்யாமல் இருக்கிறதில்லை என்று ஓர் மகாத்துமா சொல்லியிருக்கிறார். அர்ச்.அன்சேல் முஸோவென்றால் "தேவமாதாவுக்கு உண்மையான ஊழியம் செய்கிறவன் நரகத்துக்குப் போகாமல் மோட்சத்தை அடைவான்' என்று உறுதியாக எழுதி வைத்தார். அப்படி இருக்க இந்த மாதத்தில் அன்னைக்கு ஊழியம் செய்து, இனிமேல் சொல்லப்போகும் புத்திமதிகளைப் பிரமாணிக்கமாய் ஏற்று நடப்போமானால், அந்த ஆண்டவளிடத்தினின்று எண்ணிக்கையில்லாத சகாயங்களைப் பெற்றுக்கொள்வோம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதில் ஒரு காரியம் கவனிக்க வேண்டும். அன்னையுடைய சகாயங்களையும் ஆதரவுகளையும் அடைய வேண்டுமானால் அன்னை நமக்குக் காட்டுகிற புண்ணிய மாதிரிகைகளைக் கண்டு பாவித்து அன்னை நடந்தபடியே கூடின மட்டும் நடக்கக்கடவோம். ஆனதினால் இந்த மாதத்தில் தேவமாதாவைக் குறித்து எந்தப் புண்ணியத்தை விசேஷமாய்ச் செய்வோமென்று தெரிந்து கொண்டு அதை மிகுந்த சுறுசுறுப்போடு அனுசரிப்போம்.

செபம்:

பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் இராக்கினியே! என் ஆண்டவளே! சர்வேசுரனுடைய மாதாவே! நான் உமது அண்டையில் நிற்கப் பாத்திரவானல்ல; ஆகிலும் உமது திருப்பாதத்தில் விழுந்து உமக்குக் குறிக்கப்பட்ட இந்த மாதத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். மிகுந்த நேசத்துக்குரிய பரிசுத்த தாயாரே! மோட்சத்தினுடைய சந்தோஷமே! உமது மகிமைச் சிம்மாசனத்திலிருந்து என் பேரில் உமது திருக்கண்களைத் திருப்பியருளும். என் ஆத்துமத்தில் சந்தோஷத்தைப் பொழிகிற ஒரேயொரு வார்த்தையைச் சொல்லியருளும். மிகுந்த இரக்கமுமுள்ள கன்னிமாமரியே! உமது ஊழியர்களில் அடியேன் நீச அடிமையாயிருந்தாலும் இந்த மாதத்தில் உண்மையோடும் ஞான சுறுசுறுப்போடும் உமக்கு ஊழியம் செய்ய ஆசையாயிருக்கிறேன். கூடின மட்டும் உம்மை நினைத்துக்கொண்டு உமது அண்டையில் வந்து ஸ்துதித்து வேண்டிக் கொள்ளுவேன். பட்சமும் இரக்கமுமுள்ள தாயாரே! நான் எடுக்கப்போகும் பிரயாசையை நீர் ஏற்றுக்கொண்டு இந்த மாதத்திலேயும் என் ஜீவிய காலத்திலேயும் என் மரண நேரத்திலேயும் உம்முடைய உதவி சகாயத்தைக் கொடுத்தருளுவீரென்று நம்பிக்கையாயிருக்கிறேன். ஆமென்.

கிறிஸ்து இயேசுவில் பிரியமுள்ள சகோதர சகோதரிகளே,

மே மாதம் 31 ம் தேதி வரை, தேவமாதாவின் வணக்கம் மாதம் பதிவு, ஒவ்வொரு நாளும் பதிவு செய்யப்படும். மே மாதம் முழுவதும் நமது சரீரத்தை மட்டும் அல்ல, நமது ஆன்மாவையும் பரிசுத்தமாக மாற்றி, இந்த மாதம் முழுவதும் தேவமாதாவின் மாசற்ற இருதயபக்தி முயற்சியை கடைப்பிடிப்போம். தினமும் இந்த பதிவை முடிந்த வரை அனைவருக்கும் கொண்டு செல்லவும், தேவமாதா பக்தியை ஊக்குவிக்கவும், அவர்கள் பிள்ளைகள் அனைவரையும் அவர்கள் மாசற்ற இருதயத்திற்கு அர்ப்பணிப்பது, ஒவ்வொரு மாதாவின் பிள்ளைகளின் தழையாய கடமை என்பதை அறிவோம். தினமும் முழு ஜெபமாலை (153) மணிகளை தியானிப்போம்.

அர்ச்.பெர்நந்து - தேவமாதாவை நோக்கி வேண்டிக்கொண்ட செபம்:

மிகவும் இரக்கமுள்ள தாயே! உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்து உம்முடைய உபகார சகாயங்களை இரந்து உம்முடைய மன்றாட்டுக்களின் உதவியைக் கேட்ட ஒருவனாகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் கேள்விப்பட்டதில்லையென்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறேன். பெருமூச்செறிந்தழுது பாவியாகிய நான் உமது தயாளத்துக்குக் காத்துக் கொண்டு உமது சமூகத்திலே நிற்கிறேன். அவதரித்த வார்த்தையின் தாயே என் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய்க் கேட்டுத் தந்தருளும். ஆமென்.

ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச்சியசிஷ்ட மரியாயே! பாவிகளுக்கடைக்கலமே! இதோ உமது அடைக்கலமாக ஒடி வந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும்.

இப்படி மூன்றுமுறை சொல்லவும்..

1,பர. 3,அருள். திரி.

ஒவ்வொரு நாளிலும், அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது:

தேவமாதாவே! பரிசுத்த கன்னிகையே, உமது திருமைந்தனிடத்தில் எங்களுக்காக மன்றாடும்.

இந்நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது:

கோவிலையாவது தேவமாதாவின் பீடத்தையாவது சந்திக்கிறது.


 

வைகாசி மாத திருப்பலிகள் 



01.05.2023 புனித சூசையபப்ர் திருவிழா
12h30 - Église Saint Joseph des Nations
17h00 - Église Saint-Martin Noisy-le-Grand

 

14.05.2023 புனித பாத்திமா அன்னை திருவிழா
11:30 Chapelle NDR. de Belleville – 75011 - Paris



14.05.2023 புனித பாத்திமா அன்னை திருவிழா
11h30 - Chapelle Notre Dame Réconciliatrice
 


21- 05-2023 -  சார்ட் திருத்தல திருயாத்திர
14:30 Cathedrale Notre Dame -18 Cloitre Notre dame
 

28- 05-2023  புனித பிலிப்பு நேரியார் திருவிழா
11:30 Chapelle NDR. de Belleville – 75011 - Paris

 

ஆனி மாத திருப்பலிகள் 



13-06-2021 - 
புனித அந்தோனியார் திருவிழா
18:00  Eglise Ste.Genivieve - 95140 - Garges Sarcelles


18-06-2021 -
புனித அந்தோனியார் திருவிழா
15:30  Eglise St. Joseph des Nations – Goncourt – Paris


25- 06-2021
கிறீஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா 
16:00           Notre Dame de France   - 95560 Baillet-en-France


27- 06-2021
  இயேசுவின் திரு இருதயவிழா
11:30  Chapelle NDR. de Belleville – 75011 - Paris
 

 


அர்த்தமுள்ள ஆன்மீகம் - நலம் தரும் நம்பிக்கை



 

Fr. William J. Bausch என்ற அருட்பணியாளர் எழுதிய “Once Upon a Gospel: Inspiring Homilies and Insightful Reflections” என்ற நூலில் கூறப்பட்டுள்ள ஒரு கதை இது!

 


19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த ஓர் ஆயரைப் பற்றிய கதை. இந்த ஆயர் சிறந்த மறையுரையாளர். இறைவனை நம்பாதவர்கள், திருஅவையை வெறுத்துப் பழிப்பவர்கள் ஆகியோரைத் தேடிச்சென்று அவர்களிடம் பேசி வந்தார் இந்த ஆயர். அவர்களிடம் அடிக்கடி ஒரு நிகழ்வை எடுத்துச் சொல்வது இவர் வழக்கம்.


பாரிஸ் நகரில் புகழ்பெற்ற Notre Dame பேராலயத்தின் வாசலில் ஒவ்வொரு ஞாயிறன்றும் இளைஞன் ஒருவர் நின்றுகொண்டு, ஞாயிறு திருப்பலிக்குச் செல்லும் அனைவரையும் முட்டாள்கள் என்று உரத்த குரலில் கேலி செய்து வந்தார். கோவிலுக்குச் செல்பவர்கள் அவரைக் கண்டு பயந்து ஒதுங்கி சென்றனர். ஒவ்வொரு வாரமும் இந்த இளைஞனின் ஆர்ப்பாட்டம் எல்லை மீறிச் சென்றது.


ஒரு முறை ஞாயிறு திருப்பலிக்கு முன், கோவிலின் பங்குதந்தை பேராலய வாசலுக்குச் சென்றார். அவரைக் கண்டதும், இளைஞனின் கேலிப்பேச்சு உச்ச நிலையை அடைந்தது. இளைஞனின் கேலிகளை எல்லாம் பொறுமையுடன் கேட்ட பங்குத்தந்தை அவரிடம், "நான் இப்போது கூறும் சவாலை உன்னால் நிறைவேற்ற முடியாது. உனக்கு அவ்வளவு
தூரம் வீரமில்லை" என்று கூறினார். இதைக் கேட்டதும் இளைஞனின் கோபமும், கேலியும் கட்டுக்கடங்காமல் சென்றன. "முட்டாள் சாமியாரே! எனக்குச் சவால் விடுகிறாயா? சொல், எதுவாயினும் செய்து காட்டுகிறேன்." என்று அனைவரும் கேட்கும்படி கத்தினார். பங்குத்தந்தை அமைதியாகத் தொடர்ந்தார்: "கோவிலுக்குள் வா. பீடத்திற்கு முன் நின்று, சிலுவையில் இருக்கும் இயேசுவை உற்றுப் பார். பின்னர், உன்னால் முடிந்த அளவு உரத்தக் குரலில், 'கிறிஸ்து எனக்காக சிலுவையில் இறந்தார். ஆனால், அதைப்பற்றி எனக்குச் சிறிதும் கவலையில்லை.' என்று உரத்தக் குரலில் நீ கத்த வேண்டும். உன்னால் முடியுமா?" என்று பங்குத்தந்தை சவால் விடுத்தார்.


அந்தச் சவாலைத் துச்சமாக மதித்த இளைஞன், பீடத்தை நெருங்கினார். சுற்றி இருந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இளைஞன் உரத்தக் குரலில் "கிறிஸ்து எனக்காக சிலுவையில் இறந்தார். ஆனால், அதைப்பற்றி எனக்குச் சிறிதும் கவலையில்லை" என்று கத்தினார். பங்கு குரு அவரிடம், "நன்றாகக் கத்தினாய். இன்னொரு முறை கத்து" என்றார். இரண்டாவது முறையும் இளைஞன் கத்தினார். ஆனால், இம்முறை அவரது வார்த்தைகளில் கொஞ்சம் தடுமாற்றம் தெரிந்தது. பங்கு குரு இளைஞனிடம், "தயவு செய்து இறுதியாக ஒரு முறை மட்டும் கோவிலில் உள்ள அனைவரும் கேட்கும்படி கத்திவிட்டு, பின்னர் நீ போகலாம்." என்று கூறினார்.


இம்முறை இளைஞன் சிலுவையை உற்றுப் பார்த்தார். கைகளை உயர்த்தினார். அவர் கத்த முற்பட்டபோது, வார்த்தைகள் வரவில்லை. சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுவை அவரால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. கண்களைத் தாழ்த்தினார். கண்ணீர் தெறித்தது.


இந்த நிகழ்வை விவரித்துக் கூறிய ஆயர் சிறிது நேரம் அமைதியாக இருந்தபின், தொடர்ந்தார்: "அந்த இளைஞன் நான்தான். கடவுள் எனக்குத் தேவையில்லை என்று வாழ்ந்தவன் நான். ஆனால், கடவுள் எனக்குத் தேவை என்று சிலுவையில் தொங்கிய இயேசு எனக்கு உணர்த்தினார். அது மட்டுமல்ல, நான் கடவுளுக்குத் தேவை என்பதையும் அவர் எனக்குப் புரியவைத்தார்" என்று கூறினார் அந்த ஆயர்.


சிலுவையில் அறையுண்ட இயேசுவை இந்த வாரம் முழுவதும் அடிக்கடி சந்திக்கவும், சிந்திக்கவும் இருக்கிறோம். நமக்குள் என்னென்ன மாற்றங்கள் உருவாகப் போகின்றன?

 

தேசிய தலைமைக் குருவும் அனைத்து உறுப்பினர்களும் வருடாந்த கூட்ட முடிவில் எடுத்த படம்- 2021

 

video/Fatima.mp4

மரியன்னையின் பிறப்பு

 

தவக்காலத் தியானங்களை இடப்பக்கமுள்ள தவக்காலம் என்னும் பகுதியை அழுத்தி பார்க்கமுடியும்
 

      தன்னை நேசிப்பது போல பிறரை நேசி Mp4
 
 



அன்பான உறவுகளே!

எங்களது வாழ்வியலையும், உடல் உள ஆரோக்கியத்தையும் மிகப்பெரிய அளவில் பாதித்திருக்கின்ற இந்த இக்கட்டான காலகட்டத்தில், வதிவிட உரிமையை (விசா) இன்னும் பெறாதவர்களுக்கும்,  கடினமான குடும்ப நிலையில் குழந்தைகளுடன் வாழ்பவர்களுக்கும், முதியவர்களுக்கும், உறவினர்களின் உதவிகள் கிடைக்கப்பெறாதவர்களுக்கும் உதவி செய்ய நாங்கள் முன்வந்துள்ளோம்.


உங்கள் ஒவ்வொரு குடும்பங்களிலும் குறிப்பிட்ட நிலைகளில் இருந்து உதவி தேவைப்படுபவர்கள்: கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.


Père: Paul Matthew MATHANRAJ

Aumônerie Tamoule Catholique Sri Lankaise
57 Boulevard de Belleville
75011 Paris
Tel: 0148069505


உங்களது நலத்திற்காகவும், மன உறுதிக்காகவும், இந்த சோதனைக்காலத்திலிருந்து சீக்கிரம் மீண்டு வருவதற்காகவும் இறைவேண்டல் செய்கின்றோம்.
- நன்றி -

 

அன்பு இயேசுவே! என் அகக்கண்களைத் திறந்து உண்மையின் தெய்வத்தைக் காணும் வரம் தாரும். ஆமென்
நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம். அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். தி:பா: 33:20

Free Blog Widget
Stats Counter
hit counter