TAMIL CATHOLIC PAGE - FRANCE

maraikal
MUM
         
அன்பு உயிர்த்த இயேசுவே என்னையும் உமது பணியில் உடன் பணியாகியாக மாற்றியருளும் ஆமென்.
 

 
 
 

இளையோர்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

         

ஒப்புரவு அன்னை ஆலயம் - Belleville - France

மூவேளை செபம்   

பணியகத்தின் செயல்பாடுகள் 2022

 

 

 

 

 

அன்பை விதைப்போம்
அன்பால் உலகை ஆள்வோம்
அன்பு மனம் மலர்ந்திட
மரியன்னையின் உதிரம் குளிர்ந்திட
அகிலத்தில் பாவம் மறைந்திட
மார்க்கழிப் பணியில்,
மாட்டுத் தொழுவம் விடிந்திட
மக்களின் மனங்கள் மகிழ்ந்திட
அன்பால் உலகை வென்றிட
இவ்வுலகின் மாணிக்கமாய் பிறந்திட
எம்முள் வலம் வந்திட வா பாலகா வா

பாலன் இயேசுவின் பிரியமுள்ள எனது அன்பு சகோதர, சகோதரிகளே! நாம் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கிறிஸ்துவின் பிறப்பு விழா வந்துவிட்டது. நாம் அனைவரும் உள்ளத்திலும், இல்லத்திலும் தயார் செய்து கொண்டிருக்கும் இவ்வேளையிலே, உங்களோடு ஒரு சில வார்த்தைகளை பகிர்வதிலே நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் இறைமகன் இயேசு. இவ்வுலகிற்கு வந்த நோக்கம் அன்பை பகிர்வதற்கு தான். அந்த அன்பை நான் உங்களோடு பகிர்வதில் மிகவும் கடமைப்படுகின்றேன்.

சில நேரங்களில் ஒருவருடைய பலத்தையும், பணத்தையும் வைத்தே அவருக்கு ஒரு அடையாளத்தைத் தருகிறோம். ஆனால் அவருடைய குணத்தை அடையாளம் செய்ய தவறிவிடுகிறோம். ஆம் என் அன்பு உறவுகளே! இவ்வுலகிலே மனிதராக பிறக்க இருக்கும் இறைவன் நம்மிடம் உள்ள குணத்தின் அடையாளமான அன்பு என்னும் விதையையே நம்மோடு பகிர்ந்து, அந்த அன்பின் விதை உலகம் முழுவதும் படர்ந்திட வருகிறார். இந்த அன்பின் விதையை உலகில் விதைக்கும் போது, அன்பை மட்டுமே நாம் ஒருவர், மற்றொருவரிடம் இருந்து பெற முடியும். ஆனால் அன்பு என்னும் விதையை விதைக்காமல், வெறுப்பு என்னும் விதைகளை விதைத்துக் கொண்டிருப்பதால் தான் எங்கு பார்த்தாலும் போர்களால் மக்கள் மடிந்து போவதை நாம் இன்று உலகம் முழுவதும் பார்க்கின்றோம்.

வாருங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அன்பை மட்டுமே விட்டுச் சென்ற இயேசுக்கிறிஸ்து பிறக்கப் போகும் இந்நாளிலே நாமும் அன்பை விதைப்போம் அன்பால் உலகை ஆள்வோம்.

பாலன் இயேசுவின் வருகை உங்கள் அனைவரையும் மகிழ்ச்சி என்னும் வெள்ளத்திலே சமாதானம் என்னும் அன்பில் குதிக்கச் செய்வதாக!

உங்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த கிறிஸ்து பிறப்பு விழாவின் வாழ்த்துக்களோடு வருகின்ற புத்தாண்டிலே புன்னகையோடு மலர்ந்திட வாழ்த்துகிறேன்.

உறவில் நிலைக்கும்,
அருள்பணி: போல் மத்தியு மதன்ராஜ் அ.ம.தி.



 

கார்த்திகை மாத திருப்பலிகள் 

 01- 11-2023   அனைத்து புனிதர்கள் பெருவிழா

17:00  Eglise St. Joseph des Nations -75011-Paris

02- 11-2023  olor="#800080" face="Verdana">அனைத்து ஆன்மாக்களின் நினைவு நாள்
<
17:00  Eglise St. Joseph des Nations -75011-Paris>
26- 11-2023 
புனித சிசிலியா திருவிழா
 

 டிசெம்பர் மாத திருப்பலிகள் 

03- 12-2023    புனித நிக்கொலா திருவிழா
12:30  Eglise St. Joseph des Nations -75011-Paris

10- 12-2023   மரியாயின் சேனை திருவிழா
17:00 Chapelle NDR. de Belleville – 75011 - Paris

10- 12-2023    அமலோற்பவ அன்னை திருவிழா
11:30 Chapelle NDR. de Belleville – 75011 - Paris
 

17- 12-2023   புனித தோமையார் திருவிழா
11:30 Chapelle NDR. de Belleville – 75011 - Paris

24- 12-2023 கிறீஸ்து பிறப்பு விழா (இரவுத் திருப்பலி)
18:00 Eglise Ste.Genivieve - 95140 - Garges Sarcelle
20:30 Basilique N.D. Perpetuel secours
           55 BD de Ménilmontant - 75011-Paris


25- 12-2023    கிறீஸ்து பிறப்பு விழாத்திருப்பலி
12:30  Eglise St. Joseph des Nations -75011-Paris

31- 12-2023    புதுவருடத் திருப்பலி
21:30 Eglise St. Joseph des Nations
2
1:30 Eglise de Cretéil Paroissse
22:30 Eglise Ste.Genivieve - 95140 - Garges Sarcelles
22:30 Notre Dame de Blanc - Mesnil

01-01-2023 - புதுவருடத் திருப்பலி
08:45 Eglise Ste.Bathilde – 75500 - Chelles
12:30  Eglise St. Joseph des Nations -75011-Paris


அர்த்தமுள்ள ஆன்மீகம் - நலம் தரும் நம்பிக்கை

நோவாவின் கதை

வரலாற்றை உலுக்கிய திருமணம்

Fr. William J. Bausch என்ற அருட்பணியாளர் எழுதிய “Once Upon a Gospel: Inspiring Homilies and Insightful Reflections” என்ற நூலில் கூறப்பட்டுள்ள ஒரு கதை இது!

 


19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த ஓர் ஆயரைப் பற்றிய கதை. இந்த ஆயர் சிறந்த மறையுரையாளர். இறைவனை நம்பாதவர்கள், திருஅவையை வெறுத்துப் பழிப்பவர்கள் ஆகியோரைத் தேடிச்சென்று அவர்களிடம் பேசி வந்தார் இந்த ஆயர். அவர்களிடம் அடிக்கடி ஒரு நிகழ்வை எடுத்துச் சொல்வது இவர் வழக்கம்.


பாரிஸ் நகரில் புகழ்பெற்ற Notre Dame பேராலயத்தின் வாசலில் ஒவ்வொரு ஞாயிறன்றும் இளைஞன் ஒருவர் நின்றுகொண்டு, ஞாயிறு திருப்பலிக்குச் செல்லும் அனைவரையும் முட்டாள்கள் என்று உரத்த குரலில் கேலி செய்து வந்தார். கோவிலுக்குச் செல்பவர்கள் அவரைக் கண்டு பயந்து ஒதுங்கி சென்றனர். ஒவ்வொரு வாரமும் இந்த இளைஞனின் ஆர்ப்பாட்டம் எல்லை மீறிச் சென்றது.


ஒரு முறை ஞாயிறு திருப்பலிக்கு முன், கோவிலின் பங்குதந்தை பேராலய வாசலுக்குச் சென்றார். அவரைக் கண்டதும், இளைஞனின் கேலிப்பேச்சு உச்ச நிலையை அடைந்தது. இளைஞனின் கேலிகளை எல்லாம் பொறுமையுடன் கேட்ட பங்குத்தந்தை அவரிடம், "நான் இப்போது கூறும் சவாலை உன்னால் நிறைவேற்ற முடியாது. உனக்கு அவ்வளவு
தூரம் வீரமில்லை" என்று கூறினார். இதைக் கேட்டதும் இளைஞனின் கோபமும், கேலியும் கட்டுக்கடங்காமல் சென்றன. "முட்டாள் சாமியாரே! எனக்குச் சவால் விடுகிறாயா? சொல், எதுவாயினும் செய்து காட்டுகிறேன்." என்று அனைவரும் கேட்கும்படி கத்தினார். பங்குத்தந்தை அமைதியாகத் தொடர்ந்தார்: "கோவிலுக்குள் வா. பீடத்திற்கு முன் நின்று, சிலுவையில் இருக்கும் இயேசுவை உற்றுப் பார். பின்னர், உன்னால் முடிந்த அளவு உரத்தக் குரலில், 'கிறிஸ்து எனக்காக சிலுவையில் இறந்தார். ஆனால், அதைப்பற்றி எனக்குச் சிறிதும் கவலையில்லை.' என்று உரத்தக் குரலில் நீ கத்த வேண்டும். உன்னால் முடியுமா?" என்று பங்குத்தந்தை சவால் விடுத்தார்.


அந்தச் சவாலைத் துச்சமாக மதித்த இளைஞன், பீடத்தை நெருங்கினார். சுற்றி இருந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இளைஞன் உரத்தக் குரலில் "கிறிஸ்து எனக்காக சிலுவையில் இறந்தார். ஆனால், அதைப்பற்றி எனக்குச் சிறிதும் கவலையில்லை" என்று கத்தினார். பங்கு குரு அவரிடம், "நன்றாகக் கத்தினாய். இன்னொரு முறை கத்து" என்றார். இரண்டாவது முறையும் இளைஞன் கத்தினார். ஆனால், இம்முறை அவரது வார்த்தைகளில் கொஞ்சம் தடுமாற்றம் தெரிந்தது. பங்கு குரு இளைஞனிடம், "தயவு செய்து இறுதியாக ஒரு முறை மட்டும் கோவிலில் உள்ள அனைவரும் கேட்கும்படி கத்திவிட்டு, பின்னர் நீ போகலாம்." என்று கூறினார்.


இம்முறை இளைஞன் சிலுவையை உற்றுப் பார்த்தார். கைகளை உயர்த்தினார். அவர் கத்த முற்பட்டபோது, வார்த்தைகள் வரவில்லை. சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுவை அவரால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. கண்களைத் தாழ்த்தினார். கண்ணீர் தெறித்தது.


இந்த நிகழ்வை விவரித்துக் கூறிய ஆயர் சிறிது நேரம் அமைதியாக இருந்தபின், தொடர்ந்தார்: "அந்த இளைஞன் நான்தான். கடவுள் எனக்குத் தேவையில்லை என்று வாழ்ந்தவன் நான். ஆனால், கடவுள் எனக்குத் தேவை என்று சிலுவையில் தொங்கிய இயேசு எனக்கு உணர்த்தினார். அது மட்டுமல்ல, நான் கடவுளுக்குத் தேவை என்பதையும் அவர் எனக்குப் புரியவைத்தார்" என்று கூறினார் அந்த ஆயர்.


சிலுவையில் அறையுண்ட இயேசுவை இந்த வாரம் முழுவதும் அடிக்கடி சந்திக்கவும், சிந்திக்கவும் இருக்கிறோம். நமக்குள் என்னென்ன மாற்றங்கள் உருவாகப் போகின்றன?

 

தேசிய தலைமைக் குருவும் அனைத்து உறுப்பினர்களும் வருடாந்த கூட்ட முடிவில் எடுத்த படம்- 2021

 

video/Fatima.mp4

மரியன்னையின் பிறப்பு

 

தவக்காலத் தியானங்களை இடப்பக்கமுள்ள தவக்காலம் என்னும் பகுதியை அழுத்தி பார்க்கமுடியும்

      தன்னை நேசிப்பது போல பிறரை நேசி Mp4
 
 



அன்பான உறவுகளே!

எங்களது வாழ்வியலையும், உடல் உள ஆரோக்கியத்தையும் மிகப்பெரிய அளவில் பாதித்திருக்கின்ற இந்த இக்கட்டான காலகட்டத்தில், வதிவிட உரிமையை (விசா) இன்னும் பெறாதவர்களுக்கும்,  கடினமான குடும்ப நிலையில் குழந்தைகளுடன் வாழ்பவர்களுக்கும், முதியவர்களுக்கும், உறவினர்களின் உதவிகள் கிடைக்கப்பெறாதவர்களுக்கும் உதவி செய்ய நாங்கள் முன்வந்துள்ளோம்.


உங்கள் ஒவ்வொரு குடும்பங்களிலும் குறிப்பிட்ட நிலைகளில் இருந்து உதவி தேவைப்படுபவர்கள்: கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.


Père: Paul Matthew MATHANRAJ

Aumônerie Tamoule Catholique Sri Lankaise
57 Boulevard de Belleville
75011 Paris
Tel: 0148069505


உங்களது நலத்திற்காகவும், மன உறுதிக்காகவும், இந்த சோதனைக்காலத்திலிருந்து சீக்கிரம் மீண்டு வருவதற்காகவும் இறைவேண்டல் செய்கின்றோம்.
- நன்றி -

 

அன்பு இயேசுவே! என் அகக்கண்களைத் திறந்து உண்மையின் தெய்வத்தைக் காணும் வரம் தாரும். ஆமென்
நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம். அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். தி:பா: 33:20

Free Blog Widget
Stats Counter
hit counter